கோலாலம்பூர்,ஜன.11
2016 ஆம் ஆண்டில் மூடப்பட்ட நாட்டில் வரலாற்று சின்னமாக அடையாளம் காண்கின்ற மெர்டேக்கா ஸ்டேடியம் மீண்டும் 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மெர்டேக்கா ஸ்டேடியத்தை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சிக்கு பாடான் வாரிசான் மலேசியா, தேசிய பாரம்பரியத் துறை ஆகியவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவையும் பெற்றதாக தேசிய முதலீட்டு நிறுவனமான PNB எனப்படும் Permodalan Nasional Berhad தலைவர் தான் ஶ்ரீ அர்ஷாட் ராஜ துன் உடாதெரிவித்தார்.
இந்த முயற்சி நாட்டின் பாரம்பரியத்தை அதிகரிப்பதுடன், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் உயர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Arshad Raja கூறினார்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு இது ஒரு சிறந்த தலமாக மாறும் என்று அவர் குறிப்பிட்டார்.
118 ஆவது மெனாரா மெர்டேக்காவை Yang di-Pertuan Agong Al-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah அதிகாரப்பூர்வமாக நேற்று இரவு திறந்து வைத்த போது Arshad Raja இதனை அறிவித்தார்.








