Mar 14, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் ஒருவர் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் ஒருவர் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்

Share:

கிள்ளான், ஜனவரி.07-

ஆடவர் ஒருவர், தனது வீட்டில் அடையாளம் தெரியாத சந்தேகப் பேர்வழியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் கிள்ளான், தாமான் வங்சா வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்தது.

இதில் 43 வயதுடைய உள்ளூர் ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிலாங்கூர் மாநில துணை போலீஸ் தலைவர் முஹமட் ஸைனி அபு ஹசான் தெரிவித்தார்.

போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் சம்பந்தப்பட்ட நபரை, மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகப் பேர்வழி சுட்டுக் கொன்றதாகத் தெரிய வந்துள்ளது.

அவரின் உடலில் இரண்டு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த பின்னர் அந்த சந்தேகப் பேர்வழி அங்கிருந்து தப்பியுள்ளார். சவப் பரிசோதனைக்காக அந்த நபரின் உடல் கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டதாக முஹமட் ஸைனி குறிப்பிட்டார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்