லஞ்ச ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு ஆளாகியுள்ள மனித வள அமைச்சர் வி. சிவகுமார் விடுப்பில் செல்ல வேண்டும் என்று மசீச இன்று வலியுறுத்தியுள்ளது.
லஞ்ச ஊழலை வேரறுப்பற்கு உறுதி பூண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசங்கத்தின் தோற்றத்தைப் பாதிக்க செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு மனித வள அமைச்சர், தமக்கு எதிரான விசாரணை முடியும் வரையில் விடுப்பில் செல்வதே உத்தமம் என்று மசீச பேச்சாளர் மைக் சொங் யியூவ் சுஹன் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தைத் தாங்கி பிடித்துள்ள முக்கியத் தூண்களில் ஜசெக முதன்மையாக திகழ்கிறது. அந்தக் கட்சியில் சேர்ந்த ஒருவர், லஞ்ச ஊழல் விசாரணைக்கு ஆளாகியிருப்பது, கட்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மைக் சொங் குறிப்பிட்டார்.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


