லஞ்ச ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு ஆளாகியுள்ள மனித வள அமைச்சர் வி. சிவகுமார் விடுப்பில் செல்ல வேண்டும் என்று மசீச இன்று வலியுறுத்தியுள்ளது.
லஞ்ச ஊழலை வேரறுப்பற்கு உறுதி பூண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசங்கத்தின் தோற்றத்தைப் பாதிக்க செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு மனித வள அமைச்சர், தமக்கு எதிரான விசாரணை முடியும் வரையில் விடுப்பில் செல்வதே உத்தமம் என்று மசீச பேச்சாளர் மைக் சொங் யியூவ் சுஹன் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தைத் தாங்கி பிடித்துள்ள முக்கியத் தூண்களில் ஜசெக முதன்மையாக திகழ்கிறது. அந்தக் கட்சியில் சேர்ந்த ஒருவர், லஞ்ச ஊழல் விசாரணைக்கு ஆளாகியிருப்பது, கட்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மைக் சொங் குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


