ஆறு மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத்தேர்தலில் பாரிசான் நேஷனலின் உறுப்புக்கட்சிகளான மஇகா மற்றும் மசீச.விற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜஹிட் ஹமிடி இன்றிரவு அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஇகாவிற்கும், மசீச.விற்கும் வாய்ப்பு வழங்கப்படாது என்ற கூறப்பட்டுள்ள வேளையில் துணைப்பிரதமரான அகமட் ஜாஹிட்டின் இந்த அறிவிப்பு, ஏற்கனவே கூறப்பட்ட ஆருடத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மஇகாவும், மசீச.வும் சொந்த தொகுதிகளை கொண்டுள்ளன. அந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அவற்றுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


