May 24, 2026
Thisaigal NewsYouTube
காலாவதியான சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

காலாவதியான சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்

Share:

புத்ராஜெயா , ஆகஸ்ட் 12-

நாட்டில் நடப்பு சூழலுக்கு பொருத்தமற்ற மூவாயிரத்திற்கும் மேற்பட்ட காலாவதியான சட்டங்கள் இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் தெரிவித்தார்.

அந்த பழமை வாய்ந்த சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் இந்த பழங்கால சட்டங்கள் உபயோகமாற்றதாகும். எனவே நடப்பு தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப அந்த சட்டங்கள் திருத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அசாலினா தெரிவித்தார்.

இந்த மூவாயிரத்திற்கு மேற்பட்ட சட்டங்களில் பல, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு வகுக்கப்பட்டவையாகும். அந்த சட்டங்கள் யாவும், பிரதமரின் பார்வைக்காக தற்போது தொகுக்கப்பட்டு வருவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்ட்த்தில் அவர் இதனை குறிப்பிட்டார்.

Related News

காலாவதியான சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் | Thisaigal News