May 18, 2026
Thisaigal NewsYouTube
உரிமம் பெற்ற கடன் வழிமுறைகளை பயன்படுத்த மக்கள் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

உரிமம் பெற்ற கடன் வழிமுறைகளை பயன்படுத்த மக்கள் கோரிக்கை

Share:

கோலாலம்பூர், ஜூன்.28-

குறைந்த வருமானம் மற்றும் நம்பிக்கையிழந்த தரப்பினரைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதிக்கச் செய்து வரும் ஆலோங் எனும் சட்டவிரோத வட்டி முதலைகளின் நடவடிக்கைகளை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு கடுமையாகக் கருதுவதாக அதன் அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

ஆலோங் எனும் வட்டி முதலைகளிடம் சட்டவிரோதமாகக் கடனைப் பெறுகின்றவர்கள் பெரும் பகுதியினர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்கள் ஆவர். அத்தகைய மக்களைப் பயன்படுத்தி, அதிகப்படியான வட்டி விகிதங்கள் விதிப்பது, வட்டிப்பணம் கேட்டு அவர்களைக் துன்புறுத்துவது, மற்றும் வன்முறை மூலம் கடன் என்ற தீய சுழற்சியில் சிக்க வைப்பது முதலிய செயல்களில் வட்டி முதலைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை வேரோடு ஒழிக்க கடுமையான மற்றும் விரிவான நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் துறையினரை தாம் வலியுறுத்தியிருப்பதாக ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

பினாங்கு, தாமான் குளுகோர் உத்தாமாவில் மூன்று தரை வீடுகள், வட்டி முதலைகளால் தீயிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கையில் ங்கா கோர் மிங் இதனைத் தெரிவித்தார்.

இது போன்ற சிக்கல்களையும், துன்புறுத்தலையும் தவிர்க்க உரிமம் பெற்ற கடன் வழிமுறைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி