Dec 14, 2025
Thisaigal NewsYouTube
யுஇசி அங்கீகாரம்: மலாய்மொழிக்கு ஆபத்தில்லை! அரசியல் ஆக்கும் முயற்சிகளுக்கு டி.ஏ.பி. இளைஞரணி கண்டனம்!
தற்போதைய செய்திகள்

யுஇசி அங்கீகாரம்: மலாய்மொழிக்கு ஆபத்தில்லை! அரசியல் ஆக்கும் முயற்சிகளுக்கு டி.ஏ.பி. இளைஞரணி கண்டனம்!

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.14-

யுஇசி எனப்படும் ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழை அங்கீகரிப்பது மலாய்மொழியின் நிலையைச் சீர்குலைக்கும் என்ற கூற்று அடிப்படை ஆதாரமற்றது என்றும், இது முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் டி.ஏ.பி. இளைஞரணி கடுமையாகச் சாடியுள்ளது. யுஇசி அங்கீகாரத்தை எதிர்க்கும் வாதங்கள் அரசியல் சாசனத்திற்கு முரணானது அல்ல என்றும், மலாய்மொழியில் எஸ்பிஎம் தேர்ச்சி பெறுவது கூடுதல் நிபந்தனையாக வைக்கப்படும் போது, சீனப் பள்ளிகளை நிர்வகிக்கும் டோங் ஸோங் அமைப்பு தேசிய மொழியை மதிக்கிறது என்பது தெளிவாகிறது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

நம்பிக்கைக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி யுஇசி-யை அங்கீகரிக்கத் துணிவுடன் செயல்பட வேண்டும் என்றும், அனைத்துலக அங்கீகாரம் பெற்ற இச்சான்றிதழ் மூலம் மாணவர்கள் பொதுப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு இது வழிவகுக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, யுஇசி அங்கீகாரத்தை எதிர்ப்பதன் மூலம் நாட்டின் பன்முகக் கல்வி முறையை முடக்கும் அரசியல் நோக்கங்களை நிராகரித்து, இந்த விவகாரத்தை அணுகுமாறு டி.ஏ.பி. இளைஞரணி அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளது.

Related News