கோலாலம்பூர், மார்ச்.15-
கோலாலம்பூர், செராஸ், தாமான் மாலுரியில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவரைக் காவற்படையினர் கைது செய்துள்ளனர். அந்த நபரிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சில கருவிகளைப் பறிமுதல் செய்த காவற்படை, அவரிடம் நடத்திய சோதனையில் அவர் amphetamine, methamphetamine வகைப் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியிருப்பதும் உறுதியானது. கைதான நபருக்கு ஏற்கனவே குற்றவியல், போதைப்பொருள் தொடர்பான 13 பழைய குற்றப் பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது அந்த நபரை மார்ச் 21 வரை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த வழக்கு திருட்டு குற்றத்திற்கான சட்டப்பிரிவு 380-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.








