Mar 15, 2026
Thisaigal NewsYouTube
செராஸ் ஆலயத்தில் திருட்டு: 13 குற்றப் பின்னணிகளைக் கொண்ட நபர் கைது
தற்போதைய செய்திகள்

செராஸ் ஆலயத்தில் திருட்டு: 13 குற்றப் பின்னணிகளைக் கொண்ட நபர் கைது

Share:

கோலாலம்பூர், மார்ச்.15-

கோலாலம்பூர், செராஸ், தாமான் மாலுரியில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவரைக் காவற்படையினர் கைது செய்துள்ளனர். அந்த நபரிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சில கருவிகளைப் பறிமுதல் செய்த காவற்படை, அவரிடம் நடத்திய சோதனையில் அவர் amphetamine, methamphetamine வகைப் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியிருப்பதும் உறுதியானது. கைதான நபருக்கு ஏற்கனவே குற்றவியல், போதைப்பொருள் தொடர்பான 13 பழைய குற்றப் பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது அந்த நபரை மார்ச் 21 வரை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த வழக்கு திருட்டு குற்றத்திற்கான சட்டப்பிரிவு 380-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்