நவ. 17-
சுமார் 10 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போலியான நிதி கோரிக்கையில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு நிறுவன உரிமையாளரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் SPRM கைது செய்துள்ளது.
நவம்பர் 20 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் அவரைத் தடுப்புக் காவலில் வைக்க புத்ராஜயா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 முதல் கைது செய்யப்பட்டவர் இந்தக் குற்றத்தை செய்து வந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைதெரிவிக்கிறது.
கடந்த வாரம் பொறியியல் மேலாளர் ஒருவர் போலி நிதி கோரிக்கை தொடர்பாக கைது செய்ததை ஒட்டி இந்தக் கைதும் மேற்கொள்ளப்பட்டுள்ள்து என்பது குறிப்பிடத்தக்கது.








