போர்ட் டிக்சன், ஜூன் 25-
ஒரு தங்கும் விடுதியில் மற்றொரு ஆணுடன் உல்லாசத்தில் திளைத்திருந்த தனது மனைவியை தாக்கி காயம் விளைவித்ததாக நபர் ஒருவர் போர்ட் டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
37 வயது முகமட் ரித்வான் மாட் நசீர் என்ற அந்த நபர் மாஜிஸ்திரேட் உதுமான் அப்துல் கனி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள் சிறை அல்லது கூடிய பட்சம் 2 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 352A பிரிவின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த மே 24 ஆம் தேதி நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சன் -னில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 38 வயது தனது மனைவியை தாக்கியதுடன் கன்னத்திலும் உடலிலும் பல காயங்களை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.








