Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கைப்பேசியைத் திருப்பி தந்து விட்டார், நடவடிக்கையில்லை
தற்போதைய செய்திகள்

கைப்பேசியைத் திருப்பி தந்து விட்டார், நடவடிக்கையில்லை

Share:

கைப்பேசி விற்பனைக் கடையிலிருந்து iPhone 13 Pro Max வகையைச் சேர்ந்த கைப்பேசியைத் திருடிச் சென்ற நபர், அந்த விலை உயர்ந்த கைப்பேசியைத் திரும்ப ஒப்படைத்து விட்டதால், அந்தக் கைப்பேசியைத் திருடிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று கோலாலம்பூர் வங்சா மாஜு போலீஸ் தலைவர் அஷாரி அபு சமாஹ் தெரிவித்துள்ளார்.

வங்சா மாஜுவில் உள்ள அந்த கைப்பேசி கடையில் கைப்பேசி வாங்குவதைப் போல பாவனை செய்த சந்தேகப் பேர்வழி, தமது விபரங்களைப் பாரத்தில் பூர்த்தி செய்வதைப் போல நடித்து கைப்பேசியை மின்னல் வேகத்தில் திருடிக்கொண்டு ஓடிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடைக்காரர் போலீசில் புகார் செய்துள்ளார்.

இந்நிலையில் களவாடிச் செல்லப்பட்ட அந்தக் கைப்பேசியைச் சம்பந்தப்பட்டவர் திருப்பித் தந்து விட்டார் என்று கூறி, கடைக்காரர் தமது போலீஸ் புகாரை மீட்டுக்கொண்டதால் கைப்பேசியைத் திருடிய நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற போலீஸ் அதிகாரி அஷாரி அபு சமாஹ் தெரிவித்துள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்