கைப்பேசி விற்பனைக் கடையிலிருந்து iPhone 13 Pro Max வகையைச் சேர்ந்த கைப்பேசியைத் திருடிச் சென்ற நபர், அந்த விலை உயர்ந்த கைப்பேசியைத் திரும்ப ஒப்படைத்து விட்டதால், அந்தக் கைப்பேசியைத் திருடிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று கோலாலம்பூர் வங்சா மாஜு போலீஸ் தலைவர் அஷாரி அபு சமாஹ் தெரிவித்துள்ளார்.
வங்சா மாஜுவில் உள்ள அந்த கைப்பேசி கடையில் கைப்பேசி வாங்குவதைப் போல பாவனை செய்த சந்தேகப் பேர்வழி, தமது விபரங்களைப் பாரத்தில் பூர்த்தி செய்வதைப் போல நடித்து கைப்பேசியை மின்னல் வேகத்தில் திருடிக்கொண்டு ஓடிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடைக்காரர் போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில் களவாடிச் செல்லப்பட்ட அந்தக் கைப்பேசியைச் சம்பந்தப்பட்டவர் திருப்பித் தந்து விட்டார் என்று கூறி, கடைக்காரர் தமது போலீஸ் புகாரை மீட்டுக்கொண்டதால் கைப்பேசியைத் திருடிய நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற போலீஸ் அதிகாரி அஷாரி அபு சமாஹ் தெரிவித்துள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


