Jun 15, 2026
Thisaigal NewsYouTube
SPRM தலைமை ஆணையரை மாற்றாதது ஏன்?
தற்போதைய செய்திகள்

SPRM தலைமை ஆணையரை மாற்றாதது ஏன்?

Share:

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசினால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட டான்ஸ்ரீ அஸாம் பாக்கியைப் பதவி மாற்றம் செய்யாதது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.
முகைதீன் யாசின் பிரதமராக பொறுப்பேற்றப்பிறகு லத்திப்பா கோயாவின் பதவி விலகலைத் தொடர்ந்து அந்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த அஸாம் பாக்கி, எஸ்.பி.ஆர்.எம். மின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

தற்போது, நாட்டிற்கு தாம் தலைமையேற்ற போதிலும், எஸ்.பி.ஆர்.எம். தலைமை ஆணையரை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று அன்வார் விளக்கினார். ஒவ்வொரு பிரதமரும் மாறும் போது, எஸ்.பி.ஆர்.எம். போன்ற ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவி மாற்றப்படும் என்ற ஒரு தவறான தோற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கவே அஸாம் பாக்கியை தாம் மாற்றவில்லை என்று அன்வார் விளக்கினார். எஸ்.பி.ஆர்.எம். ஒரு சுதந்திரமான அமைப்பாகும். அது பிரதமரின் உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியல்லை என்பது நடப்பு விதிமுறையாகும் என்று அன்வார் தெளிவுடுத்தினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்