Mar 17, 2026
Thisaigal NewsYouTube
MYFutureJobs இணையதளத்தில் பதிவு செய்த 7,000-த்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு!
தற்போதைய செய்திகள்

MYFutureJobs இணையதளத்தில் பதிவு செய்த 7,000-த்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு!

Share:

சிரம்பான், நவம்பர்.12-

நெகிரி செம்பிலானைச் சேர்ந்த MYFutureJobs என்ற இணையத்தளத்தில், கடந்த அக்டோபர் மாதம் வரையில், வேலைக்காகப் பதிவு செய்த 7,000-த்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக வேலை வாய்பினைப் பெற்றுள்ளனர்.

இந்த அடைவு நிலையானது, மக்கள் தத்தம் திறமைக்கேற்ற பொருத்தமான வேலை வாய்ப்புகளை கண்டறிய உதவுவதில் MYFutureJobs ஓர் ஆக்கப்பூர்வமான தளமாகச் செயல்பட்டு வருவதை நிரூபித்துள்ளது என்று நெகிரி செம்பிலான் மாநில தொழில்முனைவோர், மனித வளம், பருவநிலைமாற்றம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகாரப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் Veerapan Superamaniam தெரிவித்துள்ளார்.

நேற்று சிரம்பானில் துவங்கிய 2025 ஆம் ஆண்டுக்கான MyFuturejobs career Summit எனும் நெகிரி செம்பிலான் மாநில அளவிலான வேலை வாய்ப்பு கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் Repah சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் இதனை குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலானில் வேலை வாய்ப்பு தேடி, தங்களை பதிவு செய்து கொண்ட மொத்தம் 13 ஆயிரம் பேரில், ஏழாயிரத்து முந்நூறு பேர், தாங்கள் சார்ந்த குறிப்பிட்டத் துறைகளில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பதையும் வீரப்பன் சுட்டிக் காட்டினார்.

அதே வேளையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு நடக்கும் மாநாடு, நிர்வாகம் மற்றும் நிபுணத்துவ அளவில் வேலை வாய்ப்புகளையும் உள்ளடக்கியது என்றும் வீரப்பன் சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

நேற்று துவங்கி இரண்டு நாட்கள் நடக்கும் இம்மாநாட்டில், மாநிலம் முழுவதும் சுமார் 1,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

MYFutureJobs இணையதளத்தில் பதிவு செய்த 7,000-த்திற்கும் மே... | Thisaigal News