கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் பகுதியில் நேற்று அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் கார் ஓட்டுநர் ஒருவர் கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
25 வயது இளைஞர் டி.எஸ். குகேந்திரன் என்ற அந்த கார் ஓட்டுநர் ஏற்படுத்திய இந்த விபத்தினால் 24 வயது இளைஞர் ஒருவரின் கால் துண்டிக்கப்பட்டது. மற்றொரு 19 வயது இளைஞருக்கு கை மற்றும் கால்களில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரும் தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
'அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியது' தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளையும் குகேந்திரன் மறுத்து, விசாரணை கோரினார். அவருக்கு தலா 3,000 ரிங்கிட் வீதம் மொத்தம் 6,000 ரிங்கிட் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.








