கோத்தா கினபாலு, மார்ச்.15-
பயனீட்டாளர்கள் எதையும் வாங்குவதற்கு முன், விளம்பரங்களால் ஈர்க்கப்படாமல் சரியான தேர்வையும் மதிப்பீட்டையும் செய்ய வேண்டும் எனப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். கோத்தா கினபாலுவில் நடைபெற்ற தேசிய பயனீட்டாளர் தின விழாவில் பேசிய அவர், தேவையில்லாத பொருட்களை ஆடம்பரத்திற்காகவும் உணர்ச்சிவசப்பட்டும் வாங்கும் பழக்கத்தைத் தவிர்த்து, குடும்பத்தின் உண்மையான தேவைகளை அறிந்து புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், இரமலான் மாதத்தின் நோக்கம் எளிமையைக் கடைப்பிடிப்பதே என்பதை நினைவுபடுத்திய பிரதமர், நோன்பு திறக்கும் நிகழ்வுகளில் உணவுகளை வீணாக்காமல், ஏழை எளியவர்களின் பசியை உணர்ந்து அவர்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.








