Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நகர்ப்புற புதுப்பித்தல் தீர்மானங்களை விரிவாக மதிப்பாய்வு செய்ய ங்கா கோர் மிங் உத்தரவு
தற்போதைய செய்திகள்

நகர்ப்புற புதுப்பித்தல் தீர்மானங்களை விரிவாக மதிப்பாய்வு செய்ய ங்கா கோர் மிங் உத்தரவு

Share:

ஈப்போ, அக்டோபர்.06-

நகர்ப்புற புதுப்பித்தல் உத்தேச மசோதாவை வலுப்படுத்தும் நோக்கில், அண்மைய நகர்ப்புற புதுப்பித்தல் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்துமாறு வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங், நகரம் மற்றும் கிராமப்புற திட்டமிடல் துறையான PLANMalaysia-விற்கு உத்தரவிட்டுள்ளார்.

அம்னோ முன்வைத்த திட்டங்கள் உட்பட பரிந்துரைகள் யாவும் சாத்தியமானவையா? மற்றும் பொது நலனுக்கு உகந்தவையா? என்பது குறித்து இதன் வாயிலாக பரிசீலிக்கப்படும். அவை நடைமுறைக்கு ஏற்றதாக இருக்குமானால், அவர்களின் பரிந்துரைகள் உத்தேசச் சட்ட மசோதாவில் எதிர்காலத் திருத்தங்களில் சேர்த்துக் கொள்ளப்படக்கூடும் என்று ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

கடந்த வாரம் சனிக்கிழமை ஈப்போ, புந்தோங், ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புந்தோங், கெப்பாயாங் மற்றும் பெர்சாம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 625 இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களுக்கு தலா 400 ரிங்கிட் நிதி உதவி என ஒன்றரை லட்சம் ரிங்கிட்டும், புந்தோங், ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் மண்டபத்தை விரிவுப்படுத்தும் திட்டத்திற்கு ஒரு லட்சம் ரிங்கிட் மானியமும் வழங்கிய நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ங்கா கோர் மிங் இதனைத் தெரிவித்தார்.

மக்களின் அனைத்து ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ங்கா கோர் மிங், உத்தேச நகர்புற புதுப்பித்தல் சட்ட மசோதா மக்களுக்கு, குறிப்பாக பாழடைந்த மற்றும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டதாகும் என்று விளக்கினார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி