Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மூவர் படுகொலை சம்பவம் அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

மூவர் படுகொலை சம்பவம் அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் பிடிபட்டனர்

Share:

கோலாலலம்பூர், செந்தூலில் ஒரு வீட்டில் மூன்று இலங்கைப் பிரஜைகளை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த இரண்டு இலங்கைப் பிரஜைகள் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

கொலையாளிகள் என்று நம்பப்படும் அந்த இரண்டு இலங்கைப் பிரஜைகளையும் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் செந்தூல் மாவட்ட போலீஸ் குழுவினர், கடந்த திங்கட்கழமை சிலாங்கூர், உலு லங்காட்டில் கைது செய்தனர்.

இவ்விருவரும் உலு லங்காட்டில் ஒரு காட்டில் மறைந்து இருந்த போது போலீசாரால் வளைத்துப் பிடிக்கப்பட்டனர். அந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டதை செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுகர்னோ முகமது ஜஹாரி உறுதி படுத்தினார்.

அவ்விருவரும் விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை போலீசார் பெற்றுள்ளனர். இது தொடர்பாக விரைவில் செய்தியாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் செந்தூல், ஜாலான் கோவில் ஹிலிர், ஜாலான் பெர்ஹெண்டியன் னில் உள்ள நான்கு மாடி கடைவீடு கட்டட வரிசையில் ஒரு வீட்டில் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று இலங்கைப் பிரஜைகள் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டனர்.

அவர்களை கொலை செய்ததாக நம்பப்படும் இரு இலங்கைப் பிரஜைகள் அங்கிருந்து தப்பிச் சென்ற வேளையில் அந்த வீட்டில் இருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்