Aug 11, 2026
Thisaigal NewsYouTube
நில அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

நில அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

Share:

குவாந்தான், ஏப்ரல்.18-

பகாங் மாநில அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்ளும் அத்துமீறல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று மேன்தை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா அறைகூவல் விடுத்துள்ளார்.

அரசு நிலங்களை சட்டவிரோத விளைச்சல் நிலங்களாக ஆக்கிரமித்துக் கொள்ளக்கூடாது. பகாங் மாநிலத்தில் 14 ஆயிரத்து 494 .9 ஹெக்டர் பரப்பிலான நிலங்கள், சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொள்ளப்பட்டு, பலதரப்பட்ட தானிய வகைகள் பயிரப்பட்டு வருவதாக சுல்தான் குறிப்பிட்டார்.

அதே வேளையில் பகாங் அரசுக்குச் சொந்தமான நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்ட 5 ஆயிரத்து 997.09 ஹெக்டர் வனப் பகுதியிலும் அத்துமீறல்கள் நடந்திருப்பதாக சுல்தான் தெரிவித்தார்.

விவசாயம் என்ற பெயரில் பகாங் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் சூறையாடப்படுவது ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று சுல்தான் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

ரவூப்பில் சட்டவிரோதமாக நடவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் 200 க்கும் மேற்பட்ட மூசாங் கிங் டுரியான் மரங்களைப் பகாங் அரசு வெட்டிச் சாய்த்த சம்பவத்தைத் தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்று சுல்தான் வலியுறுத்தினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி