Jun 9, 2026
Thisaigal NewsYouTube
புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி
தற்போதைய செய்திகள்

புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி

Share:

அரசாங்கத்தினால் வழங்கப்படும் புடி95 எரிபொருள் மானியத் திட்டம், பொதுமக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் தொடர்ந்து நிர்வகிக்கப்படும் என இரண்டாம் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் முதலீடு மீதான மாநாட்டில் மாநாட்டில் பேசிய அவர், தற்போதைக்கு எரிபொருள் மானியக் கோட்டா மேலும் குறைக்கப்படாது என்றும், எல்லைப் பகுதிகளில் அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்த மாதாந்திர எரிபொருள் மானியச் செலவு, தற்போது 3.5 முதல் 4 பில்லியன் ரிங்கிட் வரை குறைந்து நிலைபெற்றுள்ளது. உலக சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 200 அல்லது 300 டாலராக உயர்ந்தால் மட்டுமே இக்கொள்கை மறுபரிசீலனை செய்யப்படும் என்று அமீர் ஹம்சா குறிப்பிட்டார்.

தற்போதைய உலகளாவிய பதற்றங்களக்கு மத்தியில், எரிபொருள் பாதுகாப்பு இரண்டு முதல் மூன்று மாத கால குறுகிய கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீராக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சட்டவிரோத எரிபொருள் நிரப்பல் குறித்து புகார் அளித்து வருவதற்கும் அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News