May 24, 2026
Thisaigal NewsYouTube
402 பேருக்கு கல்வி வாய்ப்பு வழங்கப்படும்
தற்போதைய செய்திகள்

402 பேருக்கு கல்வி வாய்ப்பு வழங்கப்படும்

Share:

செரம்பன் ,செப்டம்பர் 14-

சிலாங்கூர் மற்றும் நெகிரிசெம்பிலானில் உள்ள 20 சமூகநல இல்லங்களிலிருந்து உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறத்தப்பட்டதாக கூறப்படும் 402 பிள்ளைகள் மீட்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து சிறார்களுக்கும் கல்வி வாய்ப்பை வழங்க கல்வி அமைச்சு தயாராக இருப்பதாக கல்வி தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்தார்.

மலேசியாவில் அனைத்து சிறார்களும் தொடக்கக்கல்வியை பெறுவது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்த கொள்கைக்கு ஏற்ப 402 சிறார்களுக்கும் கல்வி வாய்ப்பு வழங்குவதற்கு கல்வி அமைச்சு திறந்த மனதுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News