Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மனைவி மகனைக் கொலை செய்ததாக ஜோகூர் மருத்துவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளார்
தற்போதைய செய்திகள்

மனைவி மகனைக் கொலை செய்ததாக ஜோகூர் மருத்துவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளார்

Share:

ஜோகூர் பாரு, ஜனவரி.16-

கடந்த ஆண்டு தனது மனைவி மற்றும் மகனைக் கொலை செய்ததாக நம்பப்படும், ஜோகூரைச் சேர்ந்த 33 வயது மருத்துவர் ஒருவர், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்படவுள்ளார்.

கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி, காலை 8.30 மணியளவில், பண்டார் டத்தோ ஓன் பகுதியிலுள்ள ஒரு வீட்டில், 36 வயதான அவரது மனைவியும், 4 வயதான மகனும் கொலையுண்டு கிடந்ததாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹாமான் அர்சாட் தெரிவித்துள்ளார்.

கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் அப்பெண் இறந்து கிடந்த நிலையில், அச்சிறுவனின் முகத்தில் நீல நிறத்தில் காயங்கள் இருந்ததால் மூச்சுத் திணறல் காரணமாக இறந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவ்வீட்டிலிருந்து வெட்டுக் கத்தி, தலையணை உள்ளிட்ட பொருட்களைக் கைப்பற்றிய போலீசார், கடந்த ஜனவரி 3-ஆம் தேதி அந்த மருத்துவரையும் கைது செய்தனர்.

கடந்த 13 நாட்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த அந்த மருத்துவருக்கு, குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்பதோடு, போதைப் பொருட்களையும் அவர் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்