ஆறு வயது சிறுவன் சேய்ன் ராயன் அப்துல் மாட்டின் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒரு நபர் மட்டுமே சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஒமார் கான் தெரிவித்தார்.
டமான்சாரா டாமாய், இடாமான், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த அந்த சிறுவனின் கழுத்து நெரிக்கப்பட்டு இருக்கலாம் என்று தடயங்கள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
இக்கொலை தொடர்பில் போலீசார் இதுவரையில் சேகரித்த ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு கோணங்களில் தற்போது புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அந்த குடியிருப்புப்பகுதியில் வாகனமோட்டிகள் சிலர் வழங்கிய வாகன டேஷ்போர்ட் கேமரா பதிவுகளை அடிப்படையாக கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டத்தோ ஹுசெயின் ஒமார் மேலும் தெரிவித்தார்.








