பேரா, ஸ்ரீ மஞ்சோங், தெலோக் பாத்தே கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் பயணி ஒருவர் மாண்டார். இச்சம்பவம் நேற்று காலையில் நிகழ்ந்ததது. நீரில் மூழ்கி மூச்சுத் திணறலுக்கு ஆளாகிய அந்த 34 நூருலாபிகா அப்துல்லா என்ற மாது, ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக நேற்று காலை 6.05 மணியளவில் அந்த மாதுவின் கணவரிடமிருந்து அவசர அழைப்பை போலீசார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். தெலுக் பாத்தேக் கடற்கரைக்கு விடுமுறையை கழிக்க சென்ற அந்த மாது, அவரின் கணவர் உட்பட 9 பேர் பயணம் செய்த படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


