பேரா, ஸ்ரீ மஞ்சோங், தெலோக் பாத்தே கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் பயணி ஒருவர் மாண்டார். இச்சம்பவம் நேற்று காலையில் நிகழ்ந்ததது. நீரில் மூழ்கி மூச்சுத் திணறலுக்கு ஆளாகிய அந்த 34 நூருலாபிகா அப்துல்லா என்ற மாது, ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக நேற்று காலை 6.05 மணியளவில் அந்த மாதுவின் கணவரிடமிருந்து அவசர அழைப்பை போலீசார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். தெலுக் பாத்தேக் கடற்கரைக்கு விடுமுறையை கழிக்க சென்ற அந்த மாது, அவரின் கணவர் உட்பட 9 பேர் பயணம் செய்த படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

Related News

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது


