பேரா, ஸ்ரீ மஞ்சோங், தெலோக் பாத்தே கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் பயணி ஒருவர் மாண்டார். இச்சம்பவம் நேற்று காலையில் நிகழ்ந்ததது. நீரில் மூழ்கி மூச்சுத் திணறலுக்கு ஆளாகிய அந்த 34 நூருலாபிகா அப்துல்லா என்ற மாது, ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக நேற்று காலை 6.05 மணியளவில் அந்த மாதுவின் கணவரிடமிருந்து அவசர அழைப்பை போலீசார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். தெலுக் பாத்தேக் கடற்கரைக்கு விடுமுறையை கழிக்க சென்ற அந்த மாது, அவரின் கணவர் உட்பட 9 பேர் பயணம் செய்த படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


