பேரா, ஸ்ரீ மஞ்சோங், தெலோக் பாத்தே கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் பயணி ஒருவர் மாண்டார். இச்சம்பவம் நேற்று காலையில் நிகழ்ந்ததது. நீரில் மூழ்கி மூச்சுத் திணறலுக்கு ஆளாகிய அந்த 34 நூருலாபிகா அப்துல்லா என்ற மாது, ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக நேற்று காலை 6.05 மணியளவில் அந்த மாதுவின் கணவரிடமிருந்து அவசர அழைப்பை போலீசார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். தெலுக் பாத்தேக் கடற்கரைக்கு விடுமுறையை கழிக்க சென்ற அந்த மாது, அவரின் கணவர் உட்பட 9 பேர் பயணம் செய்த படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


