Mar 21, 2026
Thisaigal NewsYouTube
டத்தோ ஃபாமி ஃபாட்சீல் கூட்டரசு பிரதேசத்திற்குரிய பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

டத்தோ ஃபாமி ஃபாட்சீல் கூட்டரசு பிரதேசத்திற்குரிய பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.20-

தற்போது தொடர்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கும் டத்தோ ஃபாமி ஃபாட்சீல், கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று அம்னோ பரிந்துரை செய்துள்ளது.

இவ்வாண்டு இறுதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை சீரமைப்பில் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஃபாமி, அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று கூட்டரசு பிரதேச அம்னோ தொடர்புக்குழுவின் தகவல் பிரிவுத் தலைவரான டத்தோ குலாம் முஸ்ஸாஃபார் வலியுறுத்தியுள்ளார்.

கூட்டரசு பிரதேசத்தில் கோலாலம்பூர் மாநகரில் முக்கியத் தொகுதியாக விளங்கும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினராக டத்தோ ஃபாமி விளங்குவதால் கூட்டரசு பிரதேசத்திற்கு உட்பட்ட கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான் முதலியவற்றின் விவகாரங்களை உள்ளூர்வாசி என்ற முறையில் அவரால் சுலபமாகக் கையாள முடியும் என்று பத்து அம்னோ டிவிஷன் தலைவருமான குலாம் முஸ்ஸாஃபார் பரிந்துரைத்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து