குவா முசாங், ஜூலை 9-
வெட்டுமரங்களை ஏற்றிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்த டிரெய்லர் லோரி ஒன்று, எதிர்பாராதவிதமாக வெட்டுமரங்களுடன் குடை சாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்.
லோரியுடன் பிணைக்கப்பட்ட இருந்த சங்கிலி அறுந்து, வெட்டுமரங்கள் சாலையின் நாலா புறமும் கீழே விழுந்து சிதறியதில் தம்மீது விழவிருந்த வெட்டுமரம், லோரியில் தடுக்கப்பட்டு வேறு திசையில் விழுந்ததால் அந்த மாது காயத்துடன் மயிரிழையில் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் இன்று காலை 11.23 மணியளவிர் கிளந்தான், ஜாலான் குவா முசாங் - குவாலா க்ரை சாலையின் பெந்தஹாரா சாலை சந்திப்பில் நிகழ்ந்தது.
இதில்பந்தர் உத்தமா குவா முசாங்- கை நோக்கி சென்று கொண்டிருந்த 21 வயது சிதி நோரேலி கமருசன் என்ற பெண் ர் உயிர் தப்பியதாக அடையாளம் கூறப்பட்டது. எனினும் தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு அந்தப் பெண் குவா முசாங்- மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.








