கோலக்கிள்ளானுக்கு அருகில் உள்ள மீன் பிடி தீவான பூலாவ் கெத்தாமில் இன்று காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் பலகையிலான சில கடைகள் அழிந்தன. கொழுந்து விட்டு எரிந்த தீயில் அந்த தீவின் படகுத்துறையில் கட்டப்பட்டு இருந்த சில இயந்திரப் படகுகளும் சேதமுற்றன.
தீ காலை 11 மணியளவில் பரவியதாக பூலாவ் கெத்தாமில் ஹோட்டல் நடத்தி வரும் ஜோன் சா என்பவர் கூறினார். நாலா புறமும் பரவிய தீ, பிற்பகல் 1.30 மணியளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தீ ஏற்பட்டதற்கான காரணத்தை தீயணைப்பு, மீட்புப்படையினர் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


