கோலக்கிள்ளானுக்கு அருகில் உள்ள மீன் பிடி தீவான பூலாவ் கெத்தாமில் இன்று காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் பலகையிலான சில கடைகள் அழிந்தன. கொழுந்து விட்டு எரிந்த தீயில் அந்த தீவின் படகுத்துறையில் கட்டப்பட்டு இருந்த சில இயந்திரப் படகுகளும் சேதமுற்றன.
தீ காலை 11 மணியளவில் பரவியதாக பூலாவ் கெத்தாமில் ஹோட்டல் நடத்தி வரும் ஜோன் சா என்பவர் கூறினார். நாலா புறமும் பரவிய தீ, பிற்பகல் 1.30 மணியளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தீ ஏற்பட்டதற்கான காரணத்தை தீயணைப்பு, மீட்புப்படையினர் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


