Aug 5, 2026
Thisaigal NewsYouTube
பூலாவ் கெத்தாமில் தீ பலகை கடைகள் அழிந்தன
தற்போதைய செய்திகள்

பூலாவ் கெத்தாமில் தீ பலகை கடைகள் அழிந்தன

Share:

கோலக்கிள்ளானுக்கு அருகில் உள்ள மீன் பிடி தீவான பூலாவ் கெத்தாமில் இன்று காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் பலகையிலான சில கடைகள் அழிந்தன. கொழுந்து விட்டு எரிந்த தீயில் அந்த தீவின் படகுத்துறையில் கட்டப்பட்டு இருந்த சில இயந்திரப் படகுகளும் சேதமுற்றன.

தீ காலை 11 மணியளவில் பரவியதாக பூலாவ் கெத்தாமில் ஹோட்டல் நடத்தி வரும் ஜோன் சா என்பவர் கூறினார். நாலா புறமும் பரவிய தீ, பிற்பகல் 1.30 மணியளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தீ ஏற்பட்டதற்கான காரணத்தை தீயணைப்பு, மீட்புப்படையினர் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

Related News

பூலாவ் கெத்தாமில் தீ பலகை கடைகள் அழிந்தன | Thisaigal News