Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாப்பான சக்கரங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்
தற்போதைய செய்திகள்

பாதுகாப்பான சக்கரங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்

Share:

டிச. 29-

கனரக வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பான சக்கரங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இந்த ஆணையை மீறும் ஓட்டுநர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சின் தலைமைச் செயலாளர் Datuk M. Jana Santhiran தெரிவித்துள்ளார். சக்கரங்களின் தரத்திலும் பாதுகாப்பிலும் அமைச்சு தீவிர கவனம் செலுத்துகிறது என்றார்.

தொழில்நுட்ப ஆய்வுகளின் போது, பல கனரக வாகனங்கள் சாலையில் பயன்படுத்தத் தகாத சக்கரங்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இவை மற்ற சாலைப் பயனர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சேதமடைந்துள்ளன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண போக்குவரத்து அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என Jana Santhiran குறிப்பிட்டார்.

சக்கரத்தை மாற்றும் செயல்முறையை எளிதாக்க, கனரக வாகன ஓட்டுநர்கள் தரமான கூடுதல் சக்கரங்களைக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சிறப்பு தொழில்நுட்ப நடவடிக்கையின் ஒரு பகுதியாக, JPJ அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். இதன் மூலம், சாலை பாதுகாப்பை மேலும் மேம்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

சிறப்பு நடவடிக்கையின் ஐந்தாவது நாளில், 15 ஆயிரத்து 770 சரக்கு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. அதில், = ஆயிரத்து 716 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன ஐந்தாயிரத்து 163 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்