மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கெளரவ பட்டங்கள், நட்சத்திரங்கள் மற்றும் கூட்டரசு பதக்கங்கள் விருதளிப்பு விழா இன்று இஸ்தானா நெகாராவில் மிகவும் கோலாகலமாக தொடங்கப்பட்டது.
இவ்விழாவில் மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் அவரது துணைவியார் துங்கு அஸிஸா அமினா மைமுனா இஸ்கண்டாரியாவுடன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் அவரது துணைவியாரும் கலந்து சிறப்பித்தனர்.
மாமன்னர் தம்பதியருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அணிவகுப்பு நடத்தப்பட்டதுடன் அரச மலாய் படைப்பிரிவின் இன்னிசை குழுவினரால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 21 பிராங்கி குண்டுகள் முழுங்கப்பட்டன.
மாமன்னரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து, இவ்விழாவில் மொத்தம் 839 நபர்களுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


