Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மலேசிய ரிங்கிட் வலுவடைகிறது: நன்றி பாராட்ட ஒரு வார்த்தையில்லை - பிரதமர் அன்வார் வேதனை
தற்போதைய செய்திகள்

மலேசிய ரிங்கிட் வலுவடைகிறது: நன்றி பாராட்ட ஒரு வார்த்தையில்லை - பிரதமர் அன்வார் வேதனை

Share:

கோலாலம்பூர், நவம்பர்.11-

மலேசிய ரிங்கிட்டின் தொடர் வீழ்ச்சியின் போது, அரசாங்கத்தைக் கடுமையாகக் குறைக் கூறி, தாக்கி வந்த எதிர்க்கட்சியினர், இன்று ரிங்கிட் வலுவடையும் போது அது குறித்து பாராட்டுவதற்கு அவர்களுக்கு ஒரு வார்த்தை கூட கிடைக்கவில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த காலங்களில், ரிங்கிட் பலமுறை வீழ்ச்சிக் கண்டது. தற்போது அது வலுப் பெற்று வருகிறது. ஆனால் அது குறித்து யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று பிரதமர் தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

2022 ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராகத் தாம் பொறுப்பேற்ற போது, ரிங்கிட்டின் தொடர் வீழ்ச்சிக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து தாம் கடும் விமர்சனத்தைப் பெற்றதாக டத்தோ ஶ்ரீ அன்வார் நினைவு கூர்ந்தார்.

ஓர் அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று ரிங்கிட்டின் மதிப்பு 4 ரிங்கிட் 16 காசை எட்டி இருப்பதைப் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

ஆசியாவிலேயே சிறப்பாகச் செயல்படும் நாணயமாக ரிங்கிட் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாணய மதிப்பை நாம் தீர்மானிக்கவில்லை. நேர்மறையாக இருக்கும் கடன் மதிப்பீட்டால், S&P குளோபல் மதிப்பீட்டின் அடிப்படையில் ரிங்கிட்டின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவது, நாட்டின் எதிர்காலம், நிலையானதாகவும், வலுவானதாக இருக்கும் என்பதையே இது பிரிதிபலிக்கிறது என்று டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்