நவம்பர்- 10
வடகிழக்கு பருவமழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதல் மாவட்டமாக ரவூப் பட்டியலொடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ரவூப்பில் உள்ள இரு கிராமங்களில் இருந்து 25 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேர் தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டனர் என ரவூப் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது.
தற்போது வானிலை கணிக்கப்பட முடியாத நிலையில்லாதத் தன்மை கொண்டிருப்பதால் தமது தரப்பு எப்போதும் விழிப்புடன் தயாரான நிலையில் இருப்பதாக என்று அது குறிப்பிட்டுள்ளது.








