Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னருடனான சந்திப்பில் தேசிய பிரச்சினைகள் குறித்துக் கலந்தாலோசித்தார் அன்வார்!
தற்போதைய செய்திகள்

மாமன்னருடனான சந்திப்பில் தேசிய பிரச்சினைகள் குறித்துக் கலந்தாலோசித்தார் அன்வார்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.25-

இஸ்தானா புக்கிட் துங்குவில் இன்று வியாழக்கிழமை காலை மாமன்னர் சுல்தான் இப்ராஹிமைச் சந்தித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தேசிய அளவிலான பிரச்சினைகள் குறித்து அவருக்கு விளக்கமளித்தார்.

மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இச்சந்திப்பு குறித்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. பூடி மடானி ரோன்95 மானிய விலை முதல் 47-வது ஆசியான் மாநாட்டிற்குத் தயாராவது வரையில் பல்வேறு விவகாரங்கள் இச்சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

47-வது ஆசியான் உச்சி மாநாடு இவ்வாண்டு அக்டோபர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரையில் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.

இவ்வாண்டு மலேசியா ஆசியானுக்குத் தலைமை தாங்குவதோடு, "உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை" என்ற கருப்பொருளின் கீழ் இந்த உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து