தனது மனைவியை தீயிட்டு கொன்றதாக இந்திய ஆடவர் ஒருவர் பேரா, மஞ்சோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
எஸ்.கேப்ரியல் என்ற 28 வயதுடைய அந்த ஆடவர், கடந்த ஜுலை 10 ஆம் தேதி மஞ்சோங், சித்தியவான், Walbrook (வால்புரூக் ) தோட்டத்தில் 33 வயதுடைய இ. கோமதி என்ற தமது மனைவிக்கு தீயிட்டு மரணம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
மாஜிஸ்திரேட் தி.கவித்தா முன்னிலையில் நிறுத்தப்பட்ட கேப்ரியலிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வழக்கு ஈப்போ உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது.
கேளிக்கை மையம் ஒன்றில் பாதுகாவல் பணியான பொன்ஸர் வேலையை செய்து வந்ததாக கூறப்படும் கேப்ரியல்,குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டமை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


