May 1, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் போலீஸ் தலைவர் வழக்கறிஞர் ஆனார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் போலீஸ் தலைவர் வழக்கறிஞர் ஆனார்

Share:

புகிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் முன்னாள் உதவி இயக்குநரும், பேராக் மாநில முன்னாள் போலீஸ் தலைவருமான டத்தோ மியர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட், இன்று வெள்ளிக்கிழமை மலாயா உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

மலேசிய போலீஸ் துறையில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றிய, ஓய்வு பெற்ற 61 வயதுடைய மியோர் ஃபரிடலாத்ராஷ்சின் வழக்கறிஞர் நியமனம், ஈப்போ உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அப்துல் வஹாப் முகமது முன்னிலையில் நடைபெற்றது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை பேராக் மாநில போலீஸ் தலைவராக பதவி வகித்த அவர், தற்போது டெதுவான் பத்ருல், சமத், ஃபைக் & கோ என்ற வழக்கறிஞர் நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்.

போலீஸ் துறையில் பணியாற்றிய காலக்கட்டத்தில், மியோர் ஃபரிடலாத்ராஷ் மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை மேற்கொண்டு, சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னார், மலேசிய தேசிய பல்கலைகழகத்தில் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி