Jun 15, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் போலீஸ் தலைவர் வழக்கறிஞர் ஆனார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் போலீஸ் தலைவர் வழக்கறிஞர் ஆனார்

Share:

புகிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் முன்னாள் உதவி இயக்குநரும், பேராக் மாநில முன்னாள் போலீஸ் தலைவருமான டத்தோ மியர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட், இன்று வெள்ளிக்கிழமை மலாயா உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

மலேசிய போலீஸ் துறையில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றிய, ஓய்வு பெற்ற 61 வயதுடைய மியோர் ஃபரிடலாத்ராஷ்சின் வழக்கறிஞர் நியமனம், ஈப்போ உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அப்துல் வஹாப் முகமது முன்னிலையில் நடைபெற்றது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை பேராக் மாநில போலீஸ் தலைவராக பதவி வகித்த அவர், தற்போது டெதுவான் பத்ருல், சமத், ஃபைக் & கோ என்ற வழக்கறிஞர் நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்.

போலீஸ் துறையில் பணியாற்றிய காலக்கட்டத்தில், மியோர் ஃபரிடலாத்ராஷ் மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை மேற்கொண்டு, சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னார், மலேசிய தேசிய பல்கலைகழகத்தில் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்