Jan 18, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் போலீஸ் தலைவர் வழக்கறிஞர் ஆனார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் போலீஸ் தலைவர் வழக்கறிஞர் ஆனார்

Share:

புகிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் முன்னாள் உதவி இயக்குநரும், பேராக் மாநில முன்னாள் போலீஸ் தலைவருமான டத்தோ மியர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட், இன்று வெள்ளிக்கிழமை மலாயா உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

மலேசிய போலீஸ் துறையில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றிய, ஓய்வு பெற்ற 61 வயதுடைய மியோர் ஃபரிடலாத்ராஷ்சின் வழக்கறிஞர் நியமனம், ஈப்போ உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அப்துல் வஹாப் முகமது முன்னிலையில் நடைபெற்றது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை பேராக் மாநில போலீஸ் தலைவராக பதவி வகித்த அவர், தற்போது டெதுவான் பத்ருல், சமத், ஃபைக் & கோ என்ற வழக்கறிஞர் நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்.

போலீஸ் துறையில் பணியாற்றிய காலக்கட்டத்தில், மியோர் ஃபரிடலாத்ராஷ் மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை மேற்கொண்டு, சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னார், மலேசிய தேசிய பல்கலைகழகத்தில் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!