Aug 11, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் முயற்சி தோல்வி! – அரசியல் செயலாளரின் சிறப்பு அதிகாரியிடம் ஒப்படைப்பு
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் முயற்சி தோல்வி! – அரசியல் செயலாளரின் சிறப்பு அதிகாரியிடம் ஒப்படைப்பு

Share:

தாப்பா, ஏப்ரல்.20-

சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு வெள்ளப் பிரச்சனை தொடர்பான கோரிக்கை மனுவை சமர்ப்பிக்க தாமான் ஶ்ரீ மூடா குடியிருப்பாளர்களின் முயற்சி தோல்வியடைந்தது. அந்த ஆவணம் அவரது அதிகாரியிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது. அமிருடின் ஷாரியை நேரில் பார்க்க முடியவில்லை.

குடியிருப்பாளர்களின் நிகராளியான உமாகாந்தன் கிருஷ்ணன், அந்த கோரிக்கை மனுவை அமிருடின் ஷாரியின் அரசியல் செயலாளரின் சிறப்பு அதிகாரி முகமட் பிஃர்டாவுஸ் ஷீர் முகமட்டிடம் பிடோர், கம்போங் கோல்டுஸ்டிரிம் செல்லும் சாலையோரத்தில் ஒப்படைத்தார். ஷா ஆலமில் இருந்து பேருந்தில் வந்திருந்த சில குடியிருப்பாளர்களும் அப்போது உடனிருந்தனர்.

தங்கள் பகுதியில் நீடித்து வரும் வெள்ளப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணக் கோரியே அந்த மனு சமர்ப்பிக்கப்பட்டதாக உமாகாந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தாமான் ஶ்ரீ மூடா குடியிருப்பாளர்கள் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாகவும், தீர்வுக்காகக் காத்திருக்க இனியும் அவர்களுக்கு நேரமோ தெம்போ இல்லை என்றும் அவர் கூறினார். தாமான் ஶ்ரீ மூடா, புக்கிட் கெமுனிங், பத்து லாப்பான் ஆகிய பகுதிகளில் வெள்ளப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர நிரந்தரத் தீர்வு வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு