கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் யாஹ்யா பெட்ரா சாலைச் சந்திப்பில் சமிக்ஞை விளக்கை மீறி சென்றதால் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதபடை வீரர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.
காலை 7.25 மணி அளவில் நேர்ந்த இந்த விபத்தில் அந்த ஆயுதப்படை வீரர் எதிரில் வந்த பெண் மோட்டார் சைக்கிளோட்டியை மோதினார்.
39 வயதுடைய அந்தப் பெண்மணி சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த அந்த ஆயுதப்படைன் வீரரின் சடலம் ஹோஸ்பிட்டல் சான்செலர் துன்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காகக் கொண்டு செல்லப்பட்டது.








