3 வயது சிறுமி போதைப்பொருள் உட்கொண்ட விவகாரத்தில் 6 லட்சம் பின் தொடர்புவர்களை கொண்டுள்ள மலாக்கா மாநிலத்தை சேர்ந்த சமூக ஊடகப் பிரபலம் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 14-ம் தேதி, அரை மயக்க நிலையில் மலாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமியைப் பரிசோதித்ததில், அவரது உடலில் THC எனப்படும் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. முன்னதாக ஏப்ரல் 11-ம் தேதி, அச்சிறுமி மூச்சுத்திணறல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சுங்கை புடாட் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் சிறுமி இருந்தபோது இது நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, 39 வயதான அந்த சமூக ஊடக பிரபலத்தை போலீஸார் கைது செய்து, தற்போது அவரது காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்துள்ளனர்








