கோலாலம்பூர், ஜூலை 23-
இன்று ஏழு பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர் மற்றும் கோலசிலாங்கூர் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகிப்பு சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக Air Selangor நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் குண்டாங் மற்றும் சுங்கை செம்பா ஆகிய பகுதிகளில் மாசுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவற்றின் தாக்கம் ஏனைய நீர் விநியோகிப்புப்பகுதிகளில் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு 4 நீர் சுத்திரிப்பு மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதாக Air Selangor ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ரண்டௌ பஞ்சாங், சுங்கை சிலாங்கூர் கட்டம் 1, சுங்கை சிலாங்கூர் கட்டம் 2 மற்றும் சுங்கை சிலாங்கூர் கட்டம் 3 ஆகியவையே தற்காலிகமாக மூடப்பட்ட நீர் சுத்திகரிப்பு மையங்களாகும் என்று அது தெரிவித்துள்ளது.








