கடந்த வாரம் வியாழக்கிழமை சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறையின் பயணிகள் வருகைப்பகுதியில் சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ செரி தியொங் கிங் சிங் ரகளை புரிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவ்விடத்தில் குற்றத்தன்மை நிகழ்ந்துள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிவதற்கு விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.
இந்த ரகளை சம்பவத்தில் யார் தவறு இழைத்துள்ளார்கள் என்பதை கண்டறிவதற்கு இந்த விசாரணை அவசியமாகிறது என்று ஹுசெயின் ஒமார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணையில் எந்தவொரு தரப்பினரையும் அழைப்பதற்கு போலீசாருக்கு அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மத்தியில் நிலவி வருவதாக கூறப்படும் லஞ்ச ஊழல் செயலை கண்காணிப்பதற்காக தாம் விமான நிலையத்திற்கு சென்ற போது, குடிநுழைவு அதிகாரிகள், சீன நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து தாம் குரல் எழுப்பியதாக சுற்றுலா அமைச்சர் தியொங் கிங் சிங் தமது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


