Sep 2, 2026
Thisaigal NewsYouTube
ஆற்றில் விழுந்த தொழிலாளரைத் தேடும் பணி தீவிரம்
தற்போதைய செய்திகள்

ஆற்றில் விழுந்த தொழிலாளரைத் தேடும் பணி தீவிரம்

Share:

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, ஒன்றாவது மைல், சுங்கை கோம்பாக்கில் ஆற்றில் தவறி விழுந்ததாக நம்பப்படும் தொழிலாளர் ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஆற்றோரத்தில் மண்வாரி இயந்திரத்தின் உதவியுடன் பராமரிப்புப் பணியில் இரு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆற்றில் விழுந்த அந்தத் தொழிலாளர் நீரின் சுழற்சியில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், பொது தற்காப்புப் படையினரின் உதவியுடன், ஆற்றில் இறங்கி காணாமல் போன தொழிலாளரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அவரது நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

Related News