Aug 7, 2026
Thisaigal NewsYouTube
காதலனால் மாது சரமாரியாக வெட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

காதலனால் மாது சரமாரியாக வெட்டப்பட்டார்

Share:

தமது காதலை முறித்து கொள்வதாக மாது ஒருவர் தெரிவித்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாத ஆடவர் ஒருவர், அந்த மாதுவை கத்தியால் சரமாரியாக வெட்டினார்.

இச்சம்பவம் அம்பாங், புக்கிட் அந்தாராபங்சா அடுக்குமாடி வீடமைப்பு பகுதியில் கார் நிறுத்தும் இடத்தில் நிகழ்ந்தது.

காரில் அமர்ந்திருந்த 45 வயதுடைய மாதுவின் கார் டயரை கத்தியால் வெட்டிய அந்த நபர், பின்னர் காரின் முன்கண்ணாடியை அடித்து துவம்சம் செய்துள்ளார். இதைப் பார்த்து பயந்து போன அந்த மாது காரின் கதவை திறந்து தப்பித்து ஓடிய போது அவரை துரத்திச் சென்று கத்தியால் சரமாரியாக வெட்டியதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஆசம் இஸ்மாயில் தெரிவித்தார்.

வயிறு, இடதுக்கை, தோள்ப்பட்டை ஆகிய பகுதிகளில் கடும் காயங்களுக்கு ஆளான அந்த மாது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அந்த மாதுவின் காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக ஆசம் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!