தமது காதலை முறித்து கொள்வதாக மாது ஒருவர் தெரிவித்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாத ஆடவர் ஒருவர், அந்த மாதுவை கத்தியால் சரமாரியாக வெட்டினார்.
இச்சம்பவம் அம்பாங், புக்கிட் அந்தாராபங்சா அடுக்குமாடி வீடமைப்பு பகுதியில் கார் நிறுத்தும் இடத்தில் நிகழ்ந்தது.
காரில் அமர்ந்திருந்த 45 வயதுடைய மாதுவின் கார் டயரை கத்தியால் வெட்டிய அந்த நபர், பின்னர் காரின் முன்கண்ணாடியை அடித்து துவம்சம் செய்துள்ளார். இதைப் பார்த்து பயந்து போன அந்த மாது காரின் கதவை திறந்து தப்பித்து ஓடிய போது அவரை துரத்திச் சென்று கத்தியால் சரமாரியாக வெட்டியதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஆசம் இஸ்மாயில் தெரிவித்தார்.
வயிறு, இடதுக்கை, தோள்ப்பட்டை ஆகிய பகுதிகளில் கடும் காயங்களுக்கு ஆளான அந்த மாது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் அந்த மாதுவின் காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக ஆசம் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


