Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் தலைவர்கள் பெயர்களைத் தவறாக அறிவித்த சம்பவம் - ஆர்டிஎம் செயல்முறைகளை மதிப்பாய்வு செய்ய குழு அமைப்பு!
தற்போதைய செய்திகள்

ஆசியான் தலைவர்கள் பெயர்களைத் தவறாக அறிவித்த சம்பவம் - ஆர்டிஎம் செயல்முறைகளை மதிப்பாய்வு செய்ய குழு அமைப்பு!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.01-

கடந்த வாரம் நடைபெற்ற 47-வது ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் ஆர்டிஎம் நேரலை ஒளிபரப்பின் போது, மூன்று நாடுகளின் தலைவர்களின் பெயர்கள், தவறாக அறிவிக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்க, தொடர்புத்துறை அமைச்சகம் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இச்சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்கும் நோக்கில், ஆர்டிஎம் நிறுவனத்தின் செய்தித்துறை மற்றும் ஒளிபரப்புத் திட்டங்களை மதிப்பாய்வு செய்ய இந்த விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

இவ்விசாரணையில், நிர்வாகத்திலோ அல்லது ஒழுங்குமுறைகளிலோ குறைகள் இருந்தால், அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி, ஆசியான் உச்சநிலை மாநாட்டின் தொடக்க விழாவின் ஆர்டிஎம் நேரலை ஒளிபரப்பின் போது, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த நடப்புப் பிரதமர்களின் பெயர்களுக்குப் பதிலாக, முந்தைய பிரதமர்களின் பெயர்கள் தவறாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை