கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையமான KLIA மற்றும் சிப்பாங் பகுதிகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட பல போலீஸ் சோதனைகளில் 5.45 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 82 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம் பல சர்வதேச போதைப்பொருள் கும்பல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
முதல் சம்பவமாக கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி KLIA அருகிலுள்ள ஒரு வணிக வளாக வாகன நிறுத்துமிடத்தில் 19 வயதுடைய விற்பனைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்துள்ளார்.
அந்த உள்ளூர் பெண்ணிடம் இருந்து 12 பிளாஸ்டிக் பொதிகளில் வைத்திருந்த சுமார் 12.5 கிலோ syabu போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இதன் மதிப்பு சுமார் 6 லட்சத்து 25 ஆயிரம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது சம்பவமாக, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி KLIA முனையம் 1-ல் நடத்தப்பட்ட சோதனையில் மூன்று பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 90 பிளாஸ்டிக் பொதிகளில் 45 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு 3.6 மில்லியன் ரிங்கிட் என கூறப்படுகின்றது.
இதனிடையே, KLIA முனையம் 1-ல், கண்டெடுக்கப்பட்ட பெட்டி ஒன்றில் 1.225 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








