Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மோசடி குற்றங்கள் தொடர்பில் 1,066 பேர் கைது
தற்போதைய செய்திகள்

மோசடி குற்றங்கள் தொடர்பில் 1,066 பேர் கைது

Share:

இவ்வாண்டு சனவரி முதல் நவம்பர் வரை அழைப்பு மைய மோசடி குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் எஉம் சந்தேகத்தின் அடிப்படையில் ஆயிரத்து 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ அல்லவுடின் அப்துல் மஜிட் தகவல் வெளியிட்டார்.

அதே காலக் கட்டத்தில், 87 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கோலாலம்பூர், குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய சோதனை நடவடிக்கைகளில் ஆயிரத்து 609 சோதனைகள் இணைய, பல்லூடக குற்றங்கள் தொடர்பாகவும், ஆயிரத்து 222 சோதனைகள் இதரக் குற்றங்களுக்காகவும் மேர்கொள்ளப்பட்டன என அவர் மேலும் சொன்னார்.

மேலும், அதே காலக் கட்டத்தில், கோலாலம்பூர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் கீழ் 125.4 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பல்வேறு வகை போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதே சமயம், கோலாலம்பூர் காவல் துறையின் நேர்மை, இணக்கத் தர நிலை பிரிவு, 31 காவல் துறை அதிகாரிகளை பணி நிறுத்தம் செய்துள்ளது என்றார் அவர்.

Related News