May 4, 2026
Thisaigal NewsYouTube
மஸ்ஜிட் இந்தியா ஷவ்வால் சந்தை : விதிகளை மீறிய 12 வணிகர்களுக்கு அபராதம்
தற்போதைய செய்திகள்

மஸ்ஜிட் இந்தியா ஷவ்வால் சந்தை : விதிகளை மீறிய 12 வணிகர்களுக்கு அபராதம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.08-

மஸ்ஜிட் இந்தியா, லோரோங் துவாங்கு அப்துல் ரஹ்மான் பஸார் ஷவ்வாலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உரிமம் இன்றி வியாபாரம் செய்தது, விதிமுறைகளை மீறியது போன்ற காரணங்களுக்காக 12 வணிகர்களுக்கு கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் அபராதம் விதித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது உரிமம் இல்லாத வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. வெளிநாட்டு உதவியாளர்களைப் பயன்படுத்துதல், இடங்களை உள்வாடகைக்கு விடுதல் போன்ற முறைகேடுகளைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும் இந்த சட்ட அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related News