May 24, 2026
Thisaigal NewsYouTube
வழக்கு விசாரணை தொடர்பான பதிவுகளை வெளியில் பகிர தடை
தற்போதைய செய்திகள்

வழக்கு விசாரணை தொடர்பான பதிவுகளை வெளியில் பகிர தடை

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 13-

நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணை தொடர்பான பதிவுகளை, இணையம், சமூக ஊடகம் உள்பட இன்னும் இதர வகைகளில் பகிரக்கூடாது என வழக்கறிஞர் மன்றம் வழக்கறிஞர்களுக்கும் பயிற்சி வழக்கறிஞர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் குறித்து பதிவுகளை, சம்பந்தப்பட்ட தரப்பினர் சமூக ஊடகங்களில் பகிர்வதாக, சட்ட நிபுணத்துவ செயற்குழு புகார்களைப் பெற்றுள்ளதாக அம்மன்றம் கூறியது.

குறிப்பிட்ட வழக்குகளில்,எழுத்துவடிவ உரையைத் தயார் செய்யவே, நீதிமன்ற விசாரணை பதிவுகள் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படுகின்றதே தவிர, அதனை பொதுவில் வெளியிட அனுமதியில்லை என புதிதாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related News