Jul 31, 2026
Thisaigal NewsYouTube
நிலுவையில் உள்ள 160,000 அடையாள அட்டைகள் அச்சடிப்பு
தற்போதைய செய்திகள்

நிலுவையில் உள்ள 160,000 அடையாள அட்டைகள் அச்சடிப்பு

Share:

கடந்த அக்டோபர் மாதம் முதல் நிலுவையில் உள்ள 160,000 மைகிட் எனப்படும் சிறுவர்களுக்கான அடையாள அட்டைகளை தேசியப் பதிவகம் அச்சடித்து வருகின்றது எனவும் அவை கட்டம் கட்டமாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் துணை உள்துறை அமைச்சர் ஷம்சுல் அனுவார் நசரா தெரிவித்தார்.

மைகிட் அடையாள அட்டை கிடைக்கும் வரை, மிக முக்கியமான அலுவல்களுக்கு அவர்களின் பிறப்புச் சான்றிதழை பெற்றோர்களும் பாதுகாவலர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முன்னதாக நேர்ந்தது போல் மீண்டும் நடக்காமல் இருக்க, அடுத்த ஆண்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 3 மில்லியன் அடையாள அட்டைகளை தேசியப் பதிவகம் பெற்றுள்ளதாகவும் அவர் உறுதி அளித்தார்.

Related News