தஞ்சோங் மாலிமில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் வயோதிக தம்பதியரிடம் கொள்ளையடித்த நான்கு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி அதிகாலை 3.15 மணியளவில் தாமான் செந்தோசாவில் உள்ள கடை வீடொன்றில் நுழைந்த 4 முகமூடி கொள்ளையர்கள், அந்த மூத்தத் தம்பதியரை மடக்கி கொள்ளையடிக்கும் காட்சியைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்னி முஹமாட் நாசிர் தெரிவித்தார்.
கத்தியையும் பாராங்கையும் ஆயுதமாக கொண்ட அந்த சந்தேகப்பேர்வழிகள் ரோலர் ஷட்டர்கள் வாயிலாக கடைக்குள் நுழைந்து, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த 70 மற்றும் 66 வயது மதிக்கத்தக்க வயோதிக தம்பதியரை மடக்கி, விலை உயர்ந்தப் பொருட்களை கொள்ளையிட்டு சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஹஸ்னி முஹமாட் நாசிர் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு


