May 18, 2026
Thisaigal NewsYouTube
A- உட்பட 10A பெற்ற அனைவருக்கும் மெட்ரிகுலேஷன் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

A- உட்பட 10A பெற்ற அனைவருக்கும் மெட்ரிகுலேஷன் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன

Share:

கோலாலம்பூர், ஜூன்.26-

2024 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வில் 10A மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இடம் வழங்கப்படும். சில பாடங்களில் A- பெற்றவர்களுக்கும் இது பொருந்தும்.

A- உட்பட 10A மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு இடம் வழங்கப்படும் என்று அமைச்சரவை ஒப்புக் கொண்டதாக கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது, இனம் மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல் மாணவர்களின் கல்வி அடைவு நிலையை அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தக் கொள்கையானது, கடந்த ஆண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட அறிவிப்புக்கு இணங்க மேற்கொள்ளப்படுகிறது.

2024 எஸ்பிஎம்மில் 10A மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைத்து சிறந்த மாணவர்களும் தங்கள் கல்வியைத் தொடர வாய்ப்பு இருப்பதை உறுதிச் செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கான தற்போதைய பூமிபுத்ரா ஒதுக்கீடு தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதில் எந்த பாதிப்பும் இல்லை என்று கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

நாட்டின் எதிர்காலச் சொத்துக்களான அனைத்து மாணவர்களின் நலனுக்காக மடானி அரசாங்கம், கல்வி நடைமுறையை தொடர்ந்து மேம்படுத்தும் என்றும் அது உறுதி அளித்துள்ளது.

Related News

மாணவிகளை எட்டிப் பார்த்த தலைமை ஆசிரியரின் கணவர் கைது

மாணவிகளை எட்டிப் பார்த்த தலைமை ஆசிரியரின் கணவர் கைது

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது