Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தனது தம்பிக்கு குத்தகையைக் கொடுத்ததாக தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

தனது தம்பிக்கு குத்தகையைக் கொடுத்ததாக தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

Share:

ஷா ஆலாம், மார்ச்.14-

பள்ளி நிர்மணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு 48 ஆயிரத்து 50 ரிங்கிட் மதிப்புள்ள குத்தகையை தனது தம்பியின் நிறுவனத்திற்குக் கொடுத்ததாக பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் ஷா ஆலாம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

56 வயது முகமட் ஸைனி மிஸ்கோன் என்ற அந்த தலைமையாசிரியர், சிலாங்கூர் மாநிலத்தில் வீற்றிருக்கும் சிறப்புப்பள்ளி ஒன்றில் தனது பதவியைப் பயன்படுத்தி, தனது உடன்பிறப்புக்கு குத்தகையைக் கொடுத்ததாகக் குற்றப் பதிவு வாசிக்கப்பட்டது.

பள்ளியின் கூரையைச் சீரமைத்தல், துணைப் பாதையை உருவாக்குதல் முதலிய பணிகளுக்காகக் குத்தகைத் திட்டத்தில் தடை செய்யப்பட்ட நிபந்தனையையும் மீறி, தனது தம்பிக்கு அந்த குத்தகையை வழங்கியதாக அந்த தலைமையாசிரியருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுலை 8 ஆம் தேதி இக்குற்றத்தைப் புரிந்ததாக 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த தலைமையாசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து