Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மலேசிய சுங்கத்துறை காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்துள்ளது

Share:

ஜன. 19-

சிலாங்கூர், கப்பாரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சுங்கத்துறை அதிகாரிகள் மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த புகாரை அடுத்து, மலேசிய சுங்கத்துறை காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய இந்த விவகாரம் உட்பட, தங்கள் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட எந்த தவறுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வெளிப்படையாகவும் முழுமையாகவும் நடைபெற சுங்கத்துறை உறுதுணையாக இருக்கும் என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

சுங்கத்துறை எந்தவொரு ஊழல் அல்லது முறைகேட்டிலும் ஈடுபடும் அதிகாரிகள் யாரையும் பாதுகாக்காது. ஆவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியிலும் ஜனவரி 14 ஆம் தேதியிலும் சமூக ஊடகங்களில் பரவிய காணொலியில், சுங்கத்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்ட சிலர் ஒரு தொழிற்சாலையில் சோதனை நடத்தி 1 இலட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பறித்ததாகக் கூறப்பட்டது.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்