May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மலேசிய சுங்கத்துறை காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்துள்ளது

Share:

ஜன. 19-

சிலாங்கூர், கப்பாரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சுங்கத்துறை அதிகாரிகள் மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த புகாரை அடுத்து, மலேசிய சுங்கத்துறை காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய இந்த விவகாரம் உட்பட, தங்கள் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட எந்த தவறுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வெளிப்படையாகவும் முழுமையாகவும் நடைபெற சுங்கத்துறை உறுதுணையாக இருக்கும் என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

சுங்கத்துறை எந்தவொரு ஊழல் அல்லது முறைகேட்டிலும் ஈடுபடும் அதிகாரிகள் யாரையும் பாதுகாக்காது. ஆவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியிலும் ஜனவரி 14 ஆம் தேதியிலும் சமூக ஊடகங்களில் பரவிய காணொலியில், சுங்கத்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்ட சிலர் ஒரு தொழிற்சாலையில் சோதனை நடத்தி 1 இலட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பறித்ததாகக் கூறப்பட்டது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்